நாவு
நாவு
1, பட்டயம்
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது, தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன், அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. (சங் 57; 4)
2, எழுத்தாணி
என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது, நான் ராஜாவைக் குறித்துப்பாடின கவியைச் சொல்லுகிறேன், என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. (சங்45;1)
3, வில்
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள், அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக் கொள்வது சத்தியத்துக்காக அல்ல , பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள், என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ( எரே9;3)
4, சவரகன் கத்தி
நீ கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப் போல் இருக்கிறது. ( சங்52;2)
5, அம்பு
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது, அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான். (எரே9; 8)
6, நெருப்பு
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம், நம்முடைய அவயவங்களில் நாவனது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது.(யாக்3;6)
7, சாவுக்கேதுவான விஷம்
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது, அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுகேதுவன விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்3;8)
##ஆரோக்கியமுள்ள நாவு##
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம், நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். (நீதி 15;4)
ஆமென்


Comments
Post a Comment